Tuesday 21 February 2012

கோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை - 06

கோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை - 06

பகுதி - 06 

ஓம் ஸ்ரீ கோரக்க நாத ஸ்ரீ குரு பாதம் பூஜயாமி தர்ப்பயாமி நமஹ!

முக்கிய குறிப்பு: இந்த பதிவு மொழிபெயர்ப்பு மாத்திரம்தான், இதன் பொருள் மறைபொருளாக விளக்கப்பட்டுள்ளது,  படிப்பவர்கள் குருவருள் கொண்டு விளங்க முயற்சித்தால் பொருளறியலாம். இவற்றில் உள்ள விடயங்களை குண்டலினி யோகம், ஸ்ரீ சக்ர பூஜை விதிகளுடன் பொருந்திப்பார்த்து பயன்பெறலாம். ஆதலால் இது அனைவருக்குமான பதிவு அல்ல என்பதனையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த மார்க்கத்தில் உள்ளவர்களுக்கு மாத்திரமே உரியது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

   46. கோரக்கர்: எப்போது ரூபங்கள் எல்லாம் கரைந்து அரூபம் மட்டும்       மிஞ்சும் போது, நீர் வாயுவாகும் போது, சூரியனோ சந்திரனோ அற்றபோது, ஹம்ஸம் எங்கு இருக்கும்?


47. மச்சேந்திர நாதர்: இயற்கையான ஹம்ஸம் ஒருவன் சூனியத்தை அறிந்தபின் அதில் இருக்கின்றது, ரூபங்கள் எல்லாம் கரைந்து அரூபம் மட்டும் மிஞ்சும் போது ஆன்மா பரம் ஜோதியான ஒளியில் கலக்கின்றது.

48. கோரக்கர்: எது அமூலத்திற்கு மூலமானது/ மூலம் எங்கே உள்ளது? யார் குருவின் இலட்சியம்?

49. மச்சேந்திர நாதர்: சூன்யமே அமூலத்திற்கு மூலமானது, மூலம் எங்கும் வியாபித்து பரம்பியுள்ளது, விடுதலையாகிய நிர்வாணமே குருவின் இலட்சியம்.

50. கோரக்கர்: எங்கிருந்து பிராணன் எழும்புகிறது? எங்கிருந்து மனம் வருகிறது? எப்படி பேச்சு உருவாகி கரைகிறது?

51. மச்சேந்திர நாதர்: மனதின் பிறப்பு தோற்றமற்றது, பிராணன் மனதிலிருந்து உருவாகிறது, பேச்சு பிராணனிலிருந்து உருவாகிறது, மீண்டும் பேச்சு மனதில் கரகிறது.

52. கோரக்கர்: எது தடாகம்? எது தாமரை? எப்படி நாம் காலத்தை வெல்லலாம், எப்படி கண்களுக்குதெரியாத, அடையமுடியாத உலகங்களை அடையலாம்?

53. மச்சேந்திர நாதர்: மனமே தடாகம், ஆகாயமே தாமரை; ஊர்த்துவமுகமாய் மேலேற்றுபவர்கள் காலத்தை/ மரணத்தை வெல்லலாம், கீழுள்ளதையும் மேலுள்ளதையும் அறிவதன் மூலம் அறியமுடியாததை அறியலாம்.

54. கோரக்கர்: எது கடினமான வழி? எது இலகுவான வழி? எது சங்கமம்? எந்த சக்கரத்தினூடாக (நரம்பு மையத்தினூடாக) சந்திரனை நிரந்திரமாக தங்க வைக்க முடியும்? எப்படி உணர்வுள்ள மனம் பேரின்ப நிலையை அடைவது?

55. மச்சேந்திர நாதர்:  தூய வாயு மார்க்கம் கடினமான வழி, காப்பாற்றுபவரை (குருவை) சரணடைதல் இலகுவான வழி! இவையிரணும் சங்கமமாவதற்குரிய இலகுவான வழி, சந்திரனை கட்டுப்படுத்த சாகி சக்கரத்திற்கு மேல் அணையிடல் வேண்டும், விழிப்புணர்வே பேரின்பம் அடைவதர்குரிய வழி!

56. கோரக்கர்: பிறப்பு எவ்வாறு வருகிறது? எப்போது முதல் உணர்வு வருகிறது? நான் எப்படி பிறந்தேன்?


57. மச்சேந்திர நாதர்: எள்ளில் எண்ணெய் உள்ளது போல், விறகில் நெருப்பு உள்ளது போல், வாசனை மலரில் உள்ளது போல், ஆன்மா உடலில் இருக்கிறது.

No comments:

Post a Comment