Tuesday 21 February 2012

சித்தர்கள் கூறும் சுழுமுனை நாடி பற்றிய குறிப்புகளும் காயகற்பத்தின் யோக இரகசியமும்

சித்தர்கள் கூறும் சுழுமுனை நாடி பற்றிய குறிப்புகளும் காயகற்பத்தின் யோக இரகசியமும்

சித்தர் இலக்கியங்கள் படிப்பவர்கள், குண்டலினி யோகம் செய்பவர்கள், வாசி யோகம் செய்பவர்கள் அடிக்கடி கூறும் வார்த்தை யோக சித்தியிற்கு குண்டலினியை சுழுமுனை வழியாக ஏற்ற வேண்டும் என்பது. இன்றைய பதிவில் அந்த சுழுமுனை அல்லது சுஷும்னா நாடி பற்றிய குறிப்புகளை பார்ப்போம்.
மனித சூஷ்ம சரீரம் சூஷ்ம பஞ்ச பூதங்களினால் ஆக்கப்பட்டுள்ளது. இந்த சூஷ்ம சரீரத்தில் பிராணன் செல்லும் பாதைகள் நாடிகள் எனப்படும்.
இந்த நாடிகள் உருவாகும் இடமான காண்டம் எனும் பகுதி மேலாக சூஷ்ம சரீரத்தின் அமைந்துள்ளது. ஸ்தூல உடலில் முள்ளந்தண்டின் அடியிலிருந்து உருவாகுவதாக ஒப்பிடலாம்.
இந்த காண்டத்திலிருந்து  நார் போன்ற நாடிகள் உருவாகி உடல் பூராகவும் பரவுகின்றன. இவற்றில்  மூலாதாரத்திலிருந்து பிரம்மாந்திரம் வரை நேரான குழாய் வடிவில் ஆறாதாரங்கள் ஊடாக செல்லும்  யோக நாடியே சுழுமுனை எனப்படும்..
அதாவது இது பிராணனின் மத்திய கால்வாய் (Cantral canal) இந்த‌ சுழுமுனை, சக்கரங்கள் இதன் இடையின் உள்ள சேமிப்பு கிடங்குகள். அதாவது ஒரு நாட்டின் மின்சார உற்பத்தியினை ஒப்பிடுவோமானால் பிரதான இணைப்பினையின் அதனை குறைத்து கூட்டும் ட்ரான்ஸ்போமர்களையும் (Transformers) ஒப்பிடலாம். யோக நாடிகள் அந்த ட்ரான்ஸ்போமர்களில் இருந்து செல்லும் சிறு மின்சாரகம்பிகளாகவும், காண்டம் இந்த வலையமைப்பின் ஆரம்ப புள்ளியாகவும் (Network generation point) கருதலாம், ஜப்பானிய அய்கிடோ, நிஞ்சா போர்க்கலையில் ஹாரா (Hara) எனப்படும் இடமே    யோகசாத்திரத்தில் காண்டம் எனப்படுகிறது.
சுழுமுனை என்பது வஜ்ர நாடி, சித்திர நாடி எனும் மூன்று கால்வாய்களால் ஆனது. சுழுமுனை எனும் கால்வாயினுள் உள்ள நாடி வஜ்ர நாடி, வஜ்ர நாடியினுள் உள்ளது சித்திர நாடி பொதுவாக சுழுமுனை என்பது இந்த மூன்றையும் சேர்த்தே குறிக்கப்படுகிறது.
வஜ்ர நாடி சூரிய பிரகாசமும் ரஜோகுணமும் உடையது, சித்தர்களது பாடலில் சோதிவிருட்சம் எனக்குறிப்பிடப்பட்டிருக்கும்.
வஜ்ர நாடியின் உள்ளே காணப்படும் நாடி சித்திர நாடி, சித்திர நாடி வெண்ணிறமானது, சத்துவ குணமுடையது. சித்தர் பாடல்களில் வெண்சாரை எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். இதையே பிரம்ம நாடி எனவு குறிப்பிடுவர்.இதுவே யோகிகது இலக்கு, யோகசாதனையில் உண்மையில் இந்தபிரம்மநாடி மூலம் குண்டலியானஹா பிராணக்தியினை எடுத்துச் சென்று பிரம்மாந்திரத்தில் சேர்ப்பன் மூலம் காயத்தினை அழியாதநிலை உடையதாக்கலாம் என்பதுவே சித்தர்கது யோகஇரசியமாகும்.
இந்தசித்திரநாடியானது நேரடியாகஆறு ஆதாரங்களுடனும் எந்தவிதடையுமின்றி இணைந்துள்ளஒரேயொரு நாடியாகும். இதனூடாக நிரந்தரமாக பிராணக்தி செலுத்தப்பட்டால் சூஷ்மரீரத்தின் முழுமையானட்டுப்பாடும், அழிவற்றக்தியும், காய கற்ப நிலையும் கிடைக்கிறது.
இந்தஇரசியத்தை சித்தர்கள் அண்டத்திலுள்ளது பிண்டத்திலுண்டு என்ற சித்தர் மொழிக்கேற்ப பொதுவாகபொதிகை மலை, மேருமலை, தாமிரபரணி, சோதி விருட்சம் எனபுவியியல் அமைப்புகளுடன் உதாரம் கூறி, மூலிகைகள் ஆகஉவமானித்து பாடலில் கூறிச் சென்றுள்ளார்கள்.
இந்த காயகற்பத்தின் யோக இரகசியங்கள்  எப்படி சித்தர் பாடல்களில் எப்படி விளக்கப்பட்டுள்ளது என்பதனை நாளைய பதிவில் விரிவாக பார்ப்போம்.

No comments:

Post a Comment